புதுடெல்லி: அரசு துறைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் வாகனங்கள் 65 சதவீதம் உள்நாட்டு பாகங்கள் கொண்டதாக இருப்பது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் பல இணைந்து உற்பத்தியை மேற்ெகாண்டு வருகின்றன. இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் மற்றொரு முயற்சியாக, அரசு துறைகளுக்கு வாங்கப்படும் வாகனங்களுக்கும் மத்திய அரசு கட்டாய விதிகளை வகுத்துள்ளது. இதுகுறித்து கனரக வாகன அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு துறைகளுக்கு வாங்கப்படும் வாகனங்கள், 65 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பை கொண்டதாக இருப்பது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயுவில் இயங்கும் பயணிகள் மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்கள், டூவீலர்கள், 3 சக்கர வாகனங்கள் என அனைத்துக்கும் இந்த விதிகள் பொருந்தும்.