விழுப்புரம்: விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படாததால் அந்த பகுதி மக்கள் மாற்று பாதை இன்றி அவதி அடைந்து வருகின்றனர். விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த பாதை இரண்டு ஆண்டுகளுக்கு ரயில்வே நிர்வாகம் முடியாது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் சுரங்கப்பாதை பணி நிறைவடையாததால் மாற்று பாதை இன்றி அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் 5 கிலோமீட்டர் சுற்றி செல்லும் மக்கள் அருகில் சேரும் சகதியுமாக காணப்படும் வயல்வெளிகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.