திருச்சி: புயல் பாதித்த இடங்களை பார்வையிட கார், பைக் என எந்த வாகனத்தில் சென்றாலும் மக்கள் விரட்டி அடிப்பதால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை கஜா நிர்மூலமாக்கி விட்டது. அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. நிவாரண பணிகளை முறையாக செய்யவில்லை என்று கூறி பல கிராம மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக கொதிப்பில் உள்ளனர். கடந்த 17ம் தேதி வேட்டைக்காரனிருப்பு பகுதியில் சாலை மறியல் நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். வேறுவழியின்றி அப்போது அமைச்சர் சுவர் ஏறிக்குதித்து மாற்று வழியில் ெசன்றார்.
அதேபோல் 18ம் தேதி ஒரு கிராமத்தை பார்வையிட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பைக்கில் சென்றார். பைக்கை உதவியாளர் ஓட்ட பின்னால் அமைச்சர் அமர்ந்திருந்தார். பைக்கில் அமைச்சர் வருவதை கண்ட மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.