வேடசந்தூர்: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் பிரச்னைகள் குறித்து குறை கூறிய பெண்ணை அதிமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் வடமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சி மேட்டுபட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பரமசிவம் எம்எல்ஏ, கலெக்டர் வினய், தாசில்தார் சுரேஷ்கண்ணன் உள்ளிட்டோர் நேற்று பொதுமக்களிடம் குறைகள் கேட்க சென்றனர். அப்போது வயதான பெண் ஒருவர், ‘‘அதிமுக கட்சியினர் வீடுகளில் ஒரு குழாய்க்கு பதில் 2, 3 குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுத்து உள்ளனர். ஆனால் தண்ணீர் பிடிக்க தெருவில் ஒரு குழாய் கூட இல்லை,’’ என தம்பிதுரையிடம் முறையிட்டார்.