சென்னை; நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெறும் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார். கடலுக்கு சென்றதால் மீனவர்களின் படகுகளுக்கு சேதம் ஏற்படவில்லை. கரையில் இருந்த படகுகள் தான் சேதமடைந்துள்ளன என கூறினார். தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றார். எதிர்கட்சிகளும் பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுள்ளதாக கூறினார். கஜா புயல் காரணமாக 216 குடிசைகள் சேதமாகியுள்ளதாகவும், 7 மாவட்டங்களில் 4,987மரங்கள் சாய்ந்துள்ளன. 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றார்.