நாகை: கஜா புயலால் நாகை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக நாகை ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்துள்ளது. அதிக இடங்களில் மரங்கள் முறிந்து கிடக்கின்றன. மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டும், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நாகையில் வீசிய புயல் காற்று காரணமாக ரயில் நிலைய மேற்கூறை சேதமடைந்துள்ளது.