சென்னை: அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். குடிசைகளற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.25 லட்சத்திற்கு வீடு கிடைக்கக்கூடிய நிலை தமிழகத்தில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.