திருச்சியில் மணப்பாறை அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது. துவரங்குறிச்சி அடுத்த சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்து  சென்ற தீயணைப்பு வீரர்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காட்டுததீ பகுதியில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை போராடி பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக தேன்கனிக்கோட்டை ஏரியில் மீன்பிடிக்க விரித்த வலையில் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: