சென்னை: சர்கார் திரைப்படத்தில் அரசுக்கு எதிரான காட்சிகளை பதிவு செய்த, திரைப்படத்தின் இயக்குநகர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் ேநற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி உள்ளது. இந்த திட்டத்திற்காக மிக்சிகள் வாங்க ரூ.500 கோடியும், கிரைண்டர்கள் வாங்க ரூ.600 கோடியும் தமிழகம் அரசு செலவு ெசய்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளிவந்த “சர்கார்” திரைப்படத்தில் இலவச மிக்சி மற்றும் கிரைண்டர்களை ஏ.ஆர்.முருகதாஸ் தீ யில் தூக்கி எறிந்த காட்சியை கண்டு மிகவும் வேதனை அடைந்தேன். இது தமிழக அரசை இழிவு படுத்தும் நோக்கில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.