சேலம்: சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் தாரேஷ், ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிகின்றனர். சேலம் அரசு மருத்துவமனை பொறுப்பு முதல்வர் ராஜேந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.