திருவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி லியாகத் அலி, நிர்மலாதேவி வழக்கில் 30 சாட்சிகளை மூடிய நீதிமன்றத்திலும், மற்ற சாட்சிகளை திறந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கவும் நாளை மீண்டும் ஆஜராகவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சுமார் 145 சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளதாக ெதரிகிறது.விசாரணை முடிந்து வெளியே வந்த உதவி பேராசிரியர் முருகன், ‘‘ நிர்மலாதேவியை மிரட்டி, அவருக்கு மரண பயத்தை ஏற்படுத்தி சிபிசிஐடி அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.