பாரீஸ்: சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், 2 ஆண்டுக்குப் பிறகு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க உள்ளார். பிரான்சில் பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் காயம் காரணமாக நம்பர்-1 வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் போட்டியிலிருந்து திடீரென விலகினார். இதன் மூலம், 2வது இடத்தில் உள்ள ஜோகோவிச், 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நம்பர்-1 இடத்திற்கு முன்னேற உள்ளார். நடால் - ஜோகோவிச் இடையே வெறும் 35 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.