வாஷிங்டன்: அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர், அகதிகள் குழந்தை பெற்றதை காரணம் காட்டி குடியுரிமை பெறும் முறையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு முக்கிய வேலைகளில் வெளிநாட்டவர் அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் சில காலம் அங்கு வசித்த பிறகு குடியுரிமை கோரி பெறுகின்றனர். சிலர், குறுக்கு வழியை கையாள்கின்றனர். அதாவது, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர் தாங்கள் குடியுரிமை பெறாவிட்டாலும் கூட, அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அதை சாக்காக வைத்து அவர்களுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடும். அமெரிக்காவில் தற்போதுள்ள சட்ட விதிகள்தான் இதை அனுமதிக்கின்றன. இதன்படி, எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், அமெரிக்காவில் குழந்தை பெற்றால் உடனே அமெரிக்க குடியுரிமை சான்று தானாக கிடைத்துவிடும்.