சமூக ஆர்வலர் முகிலன் மீதான 2 வழக்கு ரத்து

மதுரை: காவிரி ஆற்றில் நடக்கும் மணல் ெகாள்ளையை கண்டித்தும், மணல் குவாரிகளை மூடக்கோரியும் கடந்த 29.9.2016ல் தடையை மீறி பேரணியாக சென்றதாக கூறி, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீசார், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையும், 14.11.2016ல் மணல் குவாரிகளை மூடக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி போராடிய வழக்கையும் ரத்து செய்யக்கோரி, முகிலன் உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், மனுதாரர்கள் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: