மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 30 வயதான பிரவீன் தாஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் ராணுவவீரரின் மகனான இவர் மீது சங்கிலிபறிப்பு, மிரட்டி பணம்பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் காலையில் வீட்டிலிருந்து வெளியில் புறப்பட்ட அவரை மகாலட்சுமி கோயில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. தப்பியோட முயன்ற அவரை துரத்திய அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாக்கடை குழியில் தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டது.