புதுடெல்லி: ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 81 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது 68 சதவீத உயர்வாகும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது. இதுபோல் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வருமான வரி மற்றும் நேரடி வரிகள் வசூல் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை கொள்கை முடிவு எடுக்கும் முக்கிய அமைப்பான சிபிடிடி வெளியிட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: நாட்டில் ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை சுமார் 68% அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், நிறுவனங்கள், இந்து பிரிக்கப்படாத கூட்டு குடும்பங்கள்) உள்பட ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளது நல்ல முன்னேற்றம். கடந்த 2014-15 நிதியாண்டில் வரி செலுத்திய சுமார் 88,649 நிறுவனங்கள் தங்களது வருமானம் ஆண்டிற்கு ஒரு கோடிக்கும் மேல் என்று கணக்கு காட்டியுள்ளன. இந்த எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 1,40,139 பேராக அதிகரித்துள்ளது.