சென்னை: ஒக்கியம் துரைப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த ஆதிமுனுசாமி (52). இவர் தனது நண்பர்களான துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் சூளைமா நகரை சேர்ந்த நந்தகுமார்(57), ஆயிரம் விளக்கு குலாம் அப்பாஸ் அலிகான் 9வது தெருவை சேர்ந்த செல்வகுமார்(56) ஆகியோருடன் சேர்ந்து தனக்கு சொந்தமான நீலாங்கரையில் உள்ள 7.5 ஏக்கர் நிலத்தை (ரூ.20 கோடி மதிப்பு) போலி ஆவணம் மூலம் அபகரித்துவிட்டதாக அண்ணாநகர் கிழக்கு வஉசி பிரதான தெருவை சேர்ந்த நிறைச்செல்வி (65) என்பவர் கடந்த மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.