ரூ.20 கோடி நிலத்தை அபகரித்த 3 பேர் கைது

சென்னை: ஒக்கியம் துரைப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த ஆதிமுனுசாமி (52). இவர் தனது நண்பர்களான துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் சூளைமா நகரை சேர்ந்த நந்தகுமார்(57), ஆயிரம் விளக்கு குலாம் அப்பாஸ் அலிகான் 9வது தெருவை சேர்ந்த செல்வகுமார்(56) ஆகியோருடன் சேர்ந்து தனக்கு சொந்தமான நீலாங்கரையில் உள்ள 7.5 ஏக்கர் நிலத்தை (ரூ.20 கோடி மதிப்பு) போலி ஆவணம் மூலம் அபகரித்துவிட்டதாக அண்ணாநகர் கிழக்கு வஉசி பிரதான தெருவை சேர்ந்த நிறைச்செல்வி (65) என்பவர் கடந்த மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆதிமுனுசாமி, நந்தகுமார், செல்வகுமார் ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: