கோவை: தமிழகத்தில் 12,800 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை 7,860 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. தென்மேற்கு பருவகாற்று காலம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையாகும். இக்காலத்தில் வீசும் காற்றின் மூலம் காற்றாலைகள் இயங்கி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு காற்று சீசன் ஒரு மாதம் தாமதமாக தொடங்கியது. கடந்த மே 15 முதல் ஜூலை 15 வரையிலான 2 மாதத்தில் தினமும் சராசரியாக 9 கோடி யூனிட் அளவிலான 4,600 மெகாவாட் திறன் மின் உற்பத்தியானது. ஆகஸ்ட் மாதத்தில் தினமும் சராசரியாக 10 கோடி யூனிட் உற்பத்தியாகியது.
செப்டம்பர் மாதத்தில் காற்று குறைய தொடங்கியதால், மின் உற்பத்தியும் குறைந்தது. சராசரியாக தினசரி 1.50 கோடி யூனிட் மட்டுமே உற்பத்தியானது. இம்மாதத்தில் ஆரம்பம் முதலே வெகுவாக குறைந்து கடந்த ஒரு வாரமாக முழுமையாக நின்றுள்ளது.