தேனி: நடப்பாண்டில் வைகை அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று மாலையில் வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது. இதையடுத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.