கால்டாக்சி டிரைவர் கொலையில் பிரபல ரவுடி உட்பட 4 பேர் போலீசில் சரண்: கூட்டாளியை கொன்றதற்கு பழிக்குப்பழி

சென்னை: கால்டாக்சி டிரைவர் கொலையில் பிரபல ரவுடி உட்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சிவா (29), கால்டாக்சி டிரைவரான இவரை மந்தைவெளி பஸ் டெப்போ அருகே நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், பிரபல ரவுடி சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று  கோடம்பாக்கம், ரத்தின சபாபதி தெருவை சேர்ந்த ராஜேஷ் (66), கோடம்பாக்கம்,  6வது தெரு காமராஜ் காலனியை சேர்ந்த அப்பு (21) ஆகியோர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திலும், மயிலாப்பூர், சண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்த சிவகுமார் (39) மற்றும்  மந்தைவெளி, நாராயண செட்டி தெருவை சேர்ந்த லட்சுமி (35) ஆகிய இருவரும் மயிலாப்பூர் காவல் நிலையத்திலும் சரண் அடைந்தனர். அவர்கள் நான்கு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், 2017ல் சிவகுமாரின் கூட்டாளியான சீனிவாசன் என்பவரை கார் டிரைவான சிவா கொலை செய்துள்ளார். அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று  திட்டமிட்டுள்ளார் சிவகுமார். இதற்கிைடயே ஏற்கனவே பழக்கமான லட்சுமி என்ற பெண்ணுடன் சிவாவுக்கு தொடர்பு இருப்பது சிவகுமாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, லட்சுமியிடம் சிவாவை எப்படியாவது இங்கு வரவழைத்து பேசிக்கொண்டு இரு, அப்போது அவனை தீர்த்துக் கட்டி விடுகிறோம் என்று சிவகுமார் கூறியுள்ளார். அதன்படி, லட்சுமி நேற்று முன்தினம் இரவு மந்தைவெளி டெப்போ அருகில் சிவாவை வரவழைத்து பேசியுள்ளார். அப்போது சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சிவாவை சரமாரியாக வெட்டி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: