கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உயிர்பலி வாங்க காத்திருக்கும் தரைமட்ட கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து, செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை என்பதால், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால், அவ்வப்போது விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பர்கூர் அருகே உள்ள அண்ணா நகர் என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் சுமார் 50 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணறு உள்ளது.