நாமக்கல் : பரமத்திவேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 23 சவரன் நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.