தாமிரபரணி மஹாபுஷ்கர 6ஆம் நாள் ஆரத்தி விழா

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்,  கல்லடைக்குறிச்சி, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி மஹாபுஷ்கர நிகழ்ச்சியின் ஆறாம் நாள் ஆரத்தி விழா நடைபெற்றது. தாமிரபரணி 6 ஆம் நாள் நிகழ்ச்சிகளாக தாமிரபரணி மஹாயாகம், பூர்ண அபிஷேகம் ஆகியவற்றை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நதி ஆரத்தி, ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் எராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். மாலையில் நடைபெற்ற தீப ஆராதியில் கலந்துகொண்ட அனைவரும் கையில் தீபங்கள் ஏந்தி வழிபாட்டில் ஈடுபட்டனர். பாபநாசம் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.          

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: