கராச்சி: பாகிஸ்தான் ஆட்டோ டிரைவர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.300 கோடிக்கு நடந்த பணப் பரிமாற்றம் குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பாகிஸ்தான் கராச்சி நகரில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் முகமது ரசீத். இவரது வங்கி கணக்கில் ரூ.300 கோடிக்கு மேல் பண பரிமாற்றம் நடந்தது. இதையடுத்து பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர்(எப்.ஐ.ஏ) முகமது ரசீத்துக்கு சம்மன் அனுப்பினர். அவரிடம் அவரது வங்கி கணக்கில் நடந்த பரிவர்த்தனை குறித்து கேட்டனர். இது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் கூறியதாவது: நான் கடந்த 2005ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றினேன்.