பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா இன்று காலை பெரம்பலூர் நகரில் வீதி வீதியாக சென்று டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகைள் மேற்கொண்டார். ரெங்காநகர் பகுதியில் அவர் வீடு வீடாக சென்று அங்குள்ள குடிநீர் தொட்டி, மற்றும் பெரிய அண்டாக்கள், பேரல்களில் பிடித்து வைத்துள்ள குடிநீரையும் பார்த்தார்.குடிநீரை திறந்த நிலையில் வைத்திருந்தால் டெங்கு கொசு உற்பத்தியாகும். எனவே சுத்தமான குடிநீர் மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.