சென்னை: வண்டலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராதா(25). இவர், நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி செய்து வந்தார். கடந்த 6ம் தேதி ராதா நீச்சல் பயிற்சி முடித்துவிட்டு தனது செல்போனை எடுத்து செல்லாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து ராதா நீச்சல் குளத்திற்கு வந்து அங்கு நீச்சல் பயிற்சியாளர் லஷ்மி நாராயணன் (42) என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். பிறகு ராதா காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று கூறியதும் அவர் செல்போனை கொடுத்துள்ளார். செல்போனை பெற்று ஆய்வு செய்த போது, அதில் மெமரி கார்டு மாயமாகி இருந்தது. அதில் ராதா பல புகைப்படங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.