புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தினேஷ் கார்த்திக்கு பதிலாக அறிமுக வீரராக ரிஷப் பன்ட் இடம் பெற்றுள்ளார். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் 2 போட்டிக்கான 14 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், ஆசிய கோப்பை தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கோஹ்லி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.அறிமுக வீரராக இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனி சமீபகாலமாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். எனவே உலக கோப்பைக்கு முன்பாக டோனியின் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் இடத்திற்கு மாற்று வீரரை முடிவு செய்வதற்கான முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதனால், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் அனுபவ விக்கெட் கீப்பரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டார்.