பரமத்திவேலூர்: திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பரமத்திவேலூர் அடுத்த மேல்சாத்தம்பூரில் தடுப்பணை நிரம்பியது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், 2ம் போக சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.தமிழகம் முழுவதும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பரமத்திவேலூர் பகுதி மற்றும் திருமணி முத்தாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஏற்காடு மலையடிவாரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று காலை பரமத்திவேலூர் அடுத்துள்ள மேல்சாத்தம்பூரில் அமைந்துள்ள தடுப்பணை நிரம்பி வழிந்தது.