வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2-வது சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் முதல் முறையாக வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வடகொரியா உருவான பின் வடகொரியா, அமெரிக்க அதிபர்கள் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை ஆகும். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்கா-வடகொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.