சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று இரவு திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தாமரை மலர போவதில்லை. தமிழிசை உயிரும் போக போவதில்லை. அவர் 100 ஆண்டுக்கு மேல் இருக்கட்டும். திமுக, காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளும் ஆளும் கட்சியை குறை சொல்கிறோம். ஆளும்கட்சியின் செயல்பாடுகளில் குறை உள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் ஆட்சியில் உள்ள ஒரு கட்சி எதிர்கட்சிகளை கண்டித்து கூட்டம் போடுவது இது தான் முதல்முறையாகும். டெல்லியில் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்கள் கலந்துரையாடலுக்கு செல்கிறேன். பாரதீய ஜனதா கட்சியுடன் தேர்தலுக்கும் முன்பும் தேர்தலுக்கு பின்பும் கூட்டணி கிடையாது என்று மு.க.ஸ்டாலின் சொன்ன கருத்தை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.