ஈரோட்டில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப பலி

ஈரோடு: ஈரோட்டில் பிரிண்டிங் பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த வடமாநில தொழிலாளர்கள் இருவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.  ஈரோடு பெரியசேமூர் சிஎஸ் நகர் அருகே கார்த்திகேயன் என்பவர் பிரிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு ஜார்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டம் கரிஜோரி அடுத்த மார்கோமுன்டா பகுதியை சேர்ந்த மனீர் அன்சாரி (56) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மரவாடி பண்டிட் (38) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.இவர்கள் நேற்று பட்டறையின் ரசாயன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய தொட்டிக்குள் இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கி இருவரும் பலியானதாக கூறப்படுகிறது. அவர்களை தீயணைப்பு துறையினர்   மீட்டனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: