மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வு கடந்த 14–ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இதன் புள்ளி விவரங்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அந்நிய செலாவணி கையிருப்பு 8,600 கோடி ரூபாய் அதிகரித்து, சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளது.