திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் பிஷப் பிராங்கோவை செப்.24 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்.24-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு பிராங்கோவை மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் பிஷப் பிராங்கோவின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.