புதுடெல்லி: தேசிய சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி 2018-2019ம் நிதியாண்டில் மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலாண்டிற்கு மறுசீரமைக்கப்பட்ட வட்டி விகிதம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி. 5 ஆண்டு டெபாசிட், தொடர் வைப்பு தொகை, மூத்த குடிமக்கள் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.8, 7.3 மற்றும் 8.7 சதவீதமாக உயர்த்தப்ப்பட்டுள்ளது.