மதுரை அமெரிக்கன் கல்லூரி விடுதியில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் : 3 பேர் கைது

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரி விடுதியில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் மாநகர காவல்துறை ஆணையரின் தலைமையில் செயல்படும் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் அவர்களிடம் 4 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் அமெரிக்கன் கல்லூரியில் படித்து வருவதாகவும், கல்லூரி விடுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வாங்கி செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கல்லூரிக்கு சென்று விடுதிகளில் சோதனை நடத்தினர். அனைத்து அறைகளையும் சோதனை செய்ததில், அறை எண் 47 மற்றும் 76ல் இருந்து 30க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து விடுதியில் இருந்த ஒரு மாணவரையும் கைது செய்துள்ளனர். மொத்தம் மூன்று மாணவர்களை தல்லாகுளம் அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் செல்லூரில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, தற்போது மூன்று பேரை அழைத்துக்கொண்டு போலீசார் செல்லூர் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட மற்ற மாணவர்களிடமும், கல்லூரியிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: