தஞ்சை: எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூரில் இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தஞ்சையில் திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தினர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.