மதுரை: விருதுநகர் மாவட்டம் குண்டாறு படுகையில் சவுடு மணல் அள்ள இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குண்டாறு படுகையில் சவுடு மணல் அள்ளுவதாக கூறி மணல் திருட்டு நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் மணல் அள்ள அனுமதி பெற்று விவசாய நிலங்களில் 25 அடி வரை மணலை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.