குண்டாறு படுகையில் சவுடு மணல் அள்ள இடைக்கால தடை : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம் குண்டாறு படுகையில் சவுடு மணல் அள்ள இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குண்டாறு படுகையில் சவுடு மணல் அள்ளுவதாக கூறி மணல் திருட்டு நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் மணல் அள்ள அனுமதி பெற்று விவசாய நிலங்களில் 25 அடி வரை மணலை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவள இயக்குநர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. சவுடு மணல் தொடர்பான வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: