பணகுடி: பணகுடி பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடு கிறது. குத்திரபாஞ்சான் அருவிக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.நெல்லை மாவட்டம், பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தளவாய்புரம், கொமந்தான், ரோஸ்மியாபுரம், சிவகாமிபுரம், காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. இதனால் அனுமன்நதி, சமன்அணை, கன்னிமார்தோப்பு உள்ளிட்ட ஆறுகளில் அதிகளவு வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. பணகுடி அருகே உள்ள குத்திரபாஞ்சான் அருவியில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளமாக கொட்டியது. நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால் அருவிக்கு குளிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.