சேலம்: தேங்காய் வரத்து அதிகரிப்பால் எண்ணெய் அரவை ஆலையில் தேங்காய் எண்ணெய் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டின்னுக்கு ரூ200 விலை சரிந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு போதிய மழை இல்லாததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தென்னைமரங்கள் பட்டுப்போயின. இந்த நிலையில் கடந்தாண்டும், நடப்பாண்டும் பெய்த மழையால் தென்னை மரங்களில் ஓரளவிற்கு காய்ப்பு பிடித்தது. அதன் பலன் கடந்த சில மாதமாக கிடைத்து வருகிறது. தற்போது மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் அரவைக்கும் கொப்பரை வரத்து கூடியுள்ளது. இதனால் தேங்காய் எண்ணெய் விலை சரிந்து வருகிறது.