பாவூர்சத்திரம்: வரத்து குறைவால் தக்காளி விலையில் ஏற்றம் காணப்பட்டது. நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, பெத்தநாடார்பட்டி, வெக்காலிப்பட்டி, கல்லூரணி, மகிழ்வண்ணநாதபுரம், சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், அருணாப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாரி, மிளகாய், தக்காளி, வெண்டை, சோளம் மற்றும் பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளன. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் தக்காளி பயிரிட்டு உள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.