குலசேகரம்: தொடர் மழை காரணமாக, குமரியில் 1,500 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக நடந்து வருகிறது. ரப்பர் விவசாயம் சுமார் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் மரங்களில் இருந்து கிடைக்கும் பாலில் இருந்து, தினமும் 250 டன் ரப்பர் உற்பத்தியாகி வருகிறது. ஒரு கிலோ ரப்பர் ரூ131க்கு விலை போகிறது. இதனால் தினமும் சுமார் ரூ32 கோடி அளவிற்கு வர்த்தகம் நடந்து வருகிறது. குளிர்காலத்தில் ரப்பர் பால் உற்பத்தி அதிமாக இருக்கும். ஆனால் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பால் வெட்டும் தொழில் அடியோடு பாதிப்பு அடைந்துள்ளது.