முதல்வருக்கு எதிராக கருத்து வாலிபர் கைது

திருப்பூர்: முதல்வருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட திருப்பூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசுந்தரம் (35). இவர், கொங்கு மண்டலத்துக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நுழைய முடியாது என்பது போன்ற   கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து தென்னம்பாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கணேசன் (58) அளித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து கனகசுந்தரத்தை நேற்று  கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: