சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியை மிரட்டி பணம் பறித்த 5 திருநங்கைகள் கைது

சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரிடம் பணம் மற்றும் பொருட்களை பறித்த 5 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவுரா விரைவு ரயிலின் முன்பதிவில்லா பெட்டியில் நுழைந்த திருநங்கைகள் அங்கு இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீர் என்ற பயணியை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7,000 மற்றும் கைக்கடிகாரம் பறித்துள்ளனர். மேலும் மற்ற பயணிகளையும் மிரட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் திருநங்கைகளை பிடித்து வைத்து பாதிக்கப்பட்ட சபீரிடம் அடையாளம் காட்ட சொல்லினர். இதில் சோபியா, கவிதா, பிரேமா, புஜ்ஜிமா மற்றும் அனன்யா உள்ளிட்ட 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: