மேட்டூர்: முட்டை கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முட்டைவிலையில் ஏற்றம் இறக்கம் இருப்பது வழக்கமான ஒன்று தான் என்று தெரிவித்தார். முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் சராசரி விலையை கணக்கிட்டு அதற்கேற்றவாறு சத்துணவுக்கு முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது என்று கூறினார். இதேபோல தனது உறவினருக்கு நெடுஞ்சாலைத்துறையில் பணிகளை மேற்கொள்ள டெண்டர்கள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறிய புகாரையும் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார்.