வாழ்த்து மழையில் பிரான்ஸ் அணி

பாரிஸ்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் குரோஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2வது முறையாக  சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரான்ஸ் அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேன் மெக்ரான் தனது ட்விட்டர்  பக்கத்தில் ‘நன்றி’ என ஒற்றை வார்த்தையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர்  மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் பலரும் பிரான்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘குரோஷிய அணி போராடித்  தோற்று 2வது இடம் பிடித்தாலும் எங்களைப் பொறுத்தவரை அவர்கள் உண்மையான சாம்பியன்கள் தான்’ என்று அந்நாட்டு பிரதமர் ஆந்த்ரே  பிளென்கோவிச் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: