சென்னை: மூன்று நாட்களாக நடந்து வந்த பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழக எண்ணெய் கிடங்கில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு செல்ல டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதால் பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வாடகையை உயர்த்தி தர கோரி கடந்த 9ம் தேதி முதல் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய லாரி உரிமையாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.