கோவை தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு பேசியது தொடர்பான வழக்கு : அமீர் முன்ஜாமீன்

கோவை: கோவையில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு பேசியது தொடர்பான வழக்கில் இயக்குநர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு பேசியது தொடர்பாக இயக்குநர் அமீர் மீது பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசியது உட்பட இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இதனை இன்று விசாரித்த மாவட்ட நீதிபதி அமீருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆகி அமீர் விளக்கம் அளித்தார். இதன் பின்னர் செய்தியர்களிடம் பேசிய அமீர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தன்னை தாக்க வந்தவர்கள் மீது பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.தனக்கு முன்ஜாமீன் வழங்ப்பட்டது குறித்து பேசிய அவர் தொலைக்காட்சி விவகாரத்தில் அமீர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று நீதிபதி கேட்டதையும் சுட்டிக்காட்டினார். நீதிமன்றங்கள் நீதியின் பக்கமே இருப்பதாகவும் அமீர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: