மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,000 கனஅடி

பென்னாகரம்: கபினி அணையிலிருந்து மீண்டும் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.  காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கடந்த 14ம் தேதி விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனிடையே, கபினி அணையில் இருந்து நீர்திறப்பு படிப்படியாக குறைந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கபினி அணையிலிருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 18,428 கனஅடியாக அதிகரித்துள்ளது. 50.68 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 53.04 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 2.36 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்இருப்பு 19.78 டிஎம்சியாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: