திருச்சி: காவிரி நீரை பெற்றுத்தரக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி இருந்தது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சியில் 3 திமுக தொண்டர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், நம் நாட்டில் காது குத்தும் ஆட்சியாளர்கள்தான் இருக்கிறார்கள். மத்திய மோடி அரசும், தமிழக எடப்பாடி அரசும் நாட்டைப்பற்றியோ, மக்களை பற்றியோ கவலைப்படுவதில்லை. ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் காவிரிக்காக பல போராட்டங்களை நடத்தியவர் கருணாநிதி. கர்நாடகாவுடன் நட்புறவு வைத்து தேவைப்படும் நீரை பெற்று தந்தார் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் தற்போது 7 ஆண்டாகியும் காவிரியில் இருந்து தண்ணீரை பெற முடியவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.