விருதுநகர்: காட்டு இலாகா மந்திரி என்பதால் காட்டுமிராண்டித் தனமாக பேசி வருவதாக திண்டுக்கல் சீனிவாசனை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்களின் பேச்சு கேலி கூத்தாகிவிட்டது. கம்பருக்கும் சேக்கிழாருக்கும் வித்தியாசம் தெரியாத முதலமைச்சரும், அமைச்சராக்கியவரையே கொள்ளையடித்தவர் என்று கூறும் அமைச்சரும் இருக்கும் அரசை மக்கள் எப்படி மதிப்பார்கள் என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.